×

சாத்தான்குளம் அருகே செல்போன் பேசுவதுபோல் திருஷ்டி பொம்மை

*வீடியோ வைரல்

சாத்தான்குளம் : எங்கும் செல்போன்… எதிலும் செல்போன்… திருஷ்டி பொம்மைக்கும் வந்தது செல்போன் மோகம்… சாத்தான்குளம் அருகே பேய்குளத்தில் கட்டிடப்பணி நடைபெறும் இடத்தில் செல்போன் பேசுவதுபோல் திருஷ்டி பொம்மை வைக்கப்பட்டிருப்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

தற்போதைய காலக்கட்டத்தில் உண்ண உணவு இல்லாவிட்டாலும் எவரேனும் இருந்தாலும் இருப்பார்கள், ஆனால் செல்போன் இல்லாவிட்டால் ஏதோ தனிமையில் அடைத்து வைத்ததுபோல் உணர்கின்றனர். செல்போன் ஒருவருக்கு அத்தியாவசியம்தான், ஆனால் அதில் அனாவசியமாக பொழுதை கழிப்பதன் மூலம் மாணவர்கள், இளைஞர்கள் அதற்கு அடிமையாகும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

இளைஞர்கள், மாணவர்கள் மட்டுமின்றி இளசுகள் முதல் பெருசுகள் வரை அனைவரையும் இந்த செல்போன் மோகம் விட்டு வைக்காத சூழலில், தற்போது திருஷ்டி பொம்மையையும் பிடித்துள்ளது. ‘‘அடடா திருஷ்டி பொம்மைக்கும் செல்போன் மோகமா?’’ என அஞ்ச வேண்டாம். இது வேறு எங்கும் அல்ல, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளத்தில்தான். இக்கிராமத்தை சேர்ந்த ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் பஞ் தலைவரான பெரியசாமிஸ்ரீதர், புதிதாக கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகிறார்.

வழக்கமாக திருஷ்டி பொம்மையோ அல்லது தடியங்காயில் திருஷ்டி பொம்மையின் படம் வரைந்து வைப்பது வழக்கம். ஆனால் இந்த கட்டிட உரிமையாளர், செல்போனுடன் பேசிக் கொண்டிருப்பதுபோல திருஷ்டி பொம்மையை வடிவமைத்து உள்ளார்.

தத்ரூபமாக டம்மி செல்போனை கையில் கொடுத்து பேசுவதுபோல் வடிவமைத்து இருக்கிறார்.
இந்த திருஷ்டி பொம்மையை பார்க்கும் மக்கள், இதற்கும் செல்போன் மோகம் ஏற்பட்டு விட்டதா? என வியந்து பேசிச் செல்கின்றனர். இது அப்பகுதியில் உள்ள பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

The post சாத்தான்குளம் அருகே செல்போன் பேசுவதுபோல் திருஷ்டி பொம்மை appeared first on Dinakaran.

Tags : Satankulam ,Thristhi doll ,Dinakaran ,
× RELATED உளவியல் ஆலோசனை கூட்டம்