×

முதல் போட்டியில் சிஎஸ்கே ஆர்சிபி பலப்பரீட்சை: களைகட்ட தொடங்கிய ஐபிஎல் திருவிழா…உற்சாகத்தில் ரசிகர்கள்

சென்னை: கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை பெங்களூரு அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. ஒரு புறம் தோனி, மறுபுறம் விராட்கோலி என இரு ஜாம்பவான்கள் மோதி கொள்வதால் முதல் ஆட்டமே ஐபிஎல் தொடர் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. தோனி கேப்டன் பதிவில் இருந்து விலகிய நிலையில் ருத்ராஜ் கெய்க்வாட் அணியை எப்படி வழிநடத்துவார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது அதே நேரத்தில் இம்பாக்ட் பிளேயர் விதி இருப்பதால் முடிந்த வரை தோனி பீல்டிங்கின் போது களத்தில் நின்று ருத்ராஜ்க்கு உதவியாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை அணியின் தொடக்க வீரர் டேவன் கான்வே இல்லாதது பின்னடைவை ஏற்படுத்தினாலும் அவருக்கு பதிலாக மற்றொரு நியூசிலாந்து வீரர் ரச்சின் ராவீந்திரா அந்த இடையில் களமிறங்க வாய்ப்புள்ளது. மிடில் ஆர்டரில் டேரல் மிட்செல், ரவீந்திர ஜடேஜா உள்ளிட்டோர் நம்பிக்கை அளிக்கின்றனர். சுழற்பந்து வீச்சை குறிவைத்து தாக்கும் ஷிவம் துபே காயம் காரணமாக அங்கேற்பது சந்தேகம் என்றாலும் அந்த இடத்தை உள்ளுர் போட்டிகளில் கலக்கிய சமீர் ரிஸ்வி நிரப்புவார் என தெரிகிறது.

கடந்த சீசனில் டெத் ஓவர்களில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்திய மதீஷ் பதிரானா காயத்தால் பாதிக்கப்பட்டிருப்பதால் அனுபவ வீரர்களான தீபக் சாஹர், முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகியோரை அணி பெரிதும் நம்பியுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ள ஷர்துல் தாக்கூர் ஆல்ரவுண்டராக ஜொலிக்க வாய்ப்புள்ளது. மகளிர் பிரிமியர் லீக்கில் ஆர்.சி.பி மகளிர் அணி கோப்பை வென்று இருப்பது டுப்ளஸி தலைமையிலான ஆடவர் அணி மீது நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் எப்படி விளையாடுகிறார் என்பதை பொறுத்தே உலக கோப்பையில் இடம் கிடைக்கும் என்பதால் தனிப்பட்ட முறையிலும் தன்னை விராட் கோலி நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

டுப்ளஸி, மேக்ஸ்வெல், ரஜத் பட்டிதார் , தினேஷ் கார்த்திக் என பேட்டிங்கில் வழுவுவகை திகழும் ஆர்.சி.பி இந்த முறை அணியின் பந்து வீச்சையும் பலப்படுத்தியுள்ளது. முஹகமது சிராஜ், ரீஸ் டாப்ளி, அல்சாரி ஜோசப், பெர்குஷன், யாஷ் தயாள் என ஒரு பட்டாளமே நம்பிக்கை அளிக்கிறது. மேக்ஸ்வெல், கரண் சர்மாவுடன் கேமரூன் கிரீனும் பந்து வீச்சில் அவ்வப்போது கைகொடுப்பர் என்பது அணிக்கு கூடுதல் பலம். இரு அணிகளும் இதுவரை மோதியுள்ள 31 போட்டிகளில் 20 சென்னை அணியும் 10ல் பெங்களூரு அணியும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவு கிடைக்கவில்லை அதுவே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதிய 8 போட்டிகளில் 7 ஆட்டங்களில் சி.எஸ்.கே வென்று ஆதிக்கம் செலுத்துகிறது.

The post முதல் போட்டியில் சிஎஸ்கே ஆர்சிபி பலப்பரீட்சை: களைகட்ட தொடங்கிய ஐபிஎல் திருவிழா…உற்சாகத்தில் ரசிகர்கள் appeared first on Dinakaran.

Tags : CSK ,RCB ,IPL festival ,Chennai ,IPL ,Chennai Bengaluru ,Dhoni ,Virat Kohli ,CSK RCB ,Dinakaran ,
× RELATED பதிரானாவை தவிர அனைவரும் வேகத்தை குறைத்தோம்: ஷர்துல் தாக்கூர் பேட்டி