- ஈரோடு
- மண்டல வருங்கால வைப்புநிதி
- நிதி
- ஆணையாளர்
- விரேஷ்
- நிதி ஆப்கே நிகத்
- இந்தியா
- டையிங் மில்
- பவானி ரோடு அக்ரஹாரம்
- தின மலர்
ஈரோடு, மார்ச் 22: மண்டல வைப்புநிதி ஆணையாளர் வீரேஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: ஈரோடு பவானி சாலை அக்ரஹாரம் அருகே உள்ள இந்தியா டையிங் மில் கூட்டரங்கில் வருகிற 27ம் தேதி ‘நிதி ஆப்கே நிகட்’(பிஎப் உங்கள் அருகில்) என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் குறைதீர் கூட்டம் இஎஸ்ஐசியுடன் இணைந்து நடத்தப்பட உள்ளது.
இதில் காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை சந்தாதாரர்களுக்கும், மதியம் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரை தொழிலதிபர்கள் மற்றும் விலக்களிக்கப்பட்ட நிறுவனங்களுக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த கூட்டத்தில் வருங்கால வைப்புநிதி தொடர்பான குறைகளை தெரிவிக்க விரும்பும் உறுப்பினர்கள், தொழிலதிபர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்கலாம். மேலும், முந்தைய கூட்டங்களில் மனு அளித்து நிலுவையில் உள்ளவர்கள் அதுகுறித்த விவரங்கள் மற்றும் ஆவணங்களுடன் நேரடியாக கலந்து கொண்டு பயன்பெறலாம்.
The post ஈரோட்டில் 27ம் தேதி வருங்கால வைப்புநிதி குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.