×

சூதாடிய 6 பேர் கைது

தேன்கனிக்கோட்டை, மார்ச் 22: கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி போலீசார், கேரட்டி பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த சிவலிங்கபுரத்தைச் சேர்ந்த தமிழ் (37), முருகேஷ் (52), செல்வம் (34), அம்மாசி (37), வெங்கடேசன் (32), கேரட்டி சக்திவேல் (36) ஆகிய 6பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ₹2 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

The post சூதாடிய 6 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Dhenkanikottai ,Krishnagiri District ,Anjetty ,Garati ,Tamil ,Murukesh ,Selvam ,Ammasi ,Venkatesan ,Sivalingapuram ,
× RELATED தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை...