×

ஏற்காடு மலைப்பாதையில் இளம்பெண்ணை கொன்று சூட்கேசில் அடைத்து வீச்சு

சேலம்: ஏற்காடு மலைப்பாதையில் இளம்பெண்ணை கொன்று சூட்கேசில் அடைத்து காட்டிற்குள் வீசிச் சென்ற கொலையாளிகள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் ஏற்காடு சுற்றுலாதலத்திற்கு செல்லும் சேலம்-ஏற்காடு மலைப்பாதையில் 40 அடி பாலம் அருகில் காட்டிற்குள் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியது. இதனை ரோந்து பணியில் இருந்த வனக்காவலர் பெருமாள் என்பவர் கவனித்து, மலைப்பாதையையொட்டிய காட்டிற்குள் இறங்கி பார்த்தார். அங்கு ஒரு சூட்கேஸ் கிடந்தது. அதனுள் இருந்து துர்நாற்றம் வீசியதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்த வனத்துறை உயரதிகாரிகள் மற்றும் போலீசார் விரைந்து வந்து பார்த்தனர். சூட்கேசிற்குள் இளம்பெண்ணின் சடலம் இருந்தது. பின்னர், அந்த சடலத்தை கைப்பற்றினர். 20 முதல் 30 வயதிற்குள் இருக்கும் அந்த இளம்பெண்ணின் உடல் அழுகி காணப்பட்டது.

சுடிதார் பேன்ட், ஜட்டி, பிரா மட்டும் அணிந்திருந்தார். அவரை கொலை செய்த மர்மநபர்கள், சடலத்தை சூட்கேசிற்குள் அடைத்து மலைப்பாதையில் காட்டிற்குள் வீசிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர். கொலையுண்ட பெண் யார்?, கொலை செய்து வீசியது யார்? என்பதை கண்டறிய டிஎஸ்பி அமலாஅட்வின், இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ்மோகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஏற்காட்டிற்கு வெளியூரை சேர்ந்த இளம்பெண்ணை அழைத்து வந்து, உல்லாசமாக இருந்துவிட்டு கொலை செய்து வீசியிருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள்ளது. அதன்பேரில், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட சுற்றியுள்ள மாவட்டங்களில் இளம்பெண் மாயம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டு, யாரேனும் தேடப்பட்டு வருகின்றனரா? என போலீசார் விசாரிக்கின்றனர். இதற்காக அந்தந்த மாவட்டங்களில் மிஸ்சிங் வழக்கு பட்டியலை தனிப்படை போலீசார் கேட்டுள்ளனர்.

இக்கொலையில் ஈடுபட்ட மர்மநபர்கள், இளம்பெண் உடலை சூட்கேசில் அடைத்து வீசியிருப்பதால், எப்படியும் குறைந்தது 2 பேராவது சம்பந்தப்பட்டிருக்க வேண்டும் என போலீசார் கருதுகின்றனர். அதேபோல், பைக், ஆட்டோ, கார் ஆகிய ஏதேனும் ஒரு வாகனத்தில் ஏற்றி வந்து தான், காட்டிற்குள் வீசியிருக்க வேண்டும். அதனால், அந்த வாகனத்தை அடையாளம் கண்டுவிட்டால், குற்றவாளிகளை பிடித்து விடலாம் என்பதால் தனிப்படை போலீசார் அதற்கான விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இதற்காக ஏற்காடு மலையில் இருந்து இறங்கும் ஆரம்ப பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் இருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். இதனிடையே கொலையுண்ட இளம்பெண்ணின் உடலை இன்று சேலம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யவுள்ளனர்.

The post ஏற்காடு மலைப்பாதையில் இளம்பெண்ணை கொன்று சூட்கேசில் அடைத்து வீச்சு appeared first on Dinakaran.

Tags : Yercaud ,Salem ,Salem-Yerkadu ,Dinakaran ,
× RELATED ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்