×

CSK அணிக்காக 5 சாம்பியன் கோப்பைகளை வென்ற தோனி, கேப்டன் பொறுப்பில் இருந்து விடுவிப்பு : புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் அறிவிப்பு!!

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் அறிவிக்கப்பட்டுள்ளார். ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் 17வது ஐபிஎல் தொடர் நாளை தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியனும், 5 முறை பட்டம் வென்றுள்ள அணியுமான சென்னை சூப்பர் கிங்ஸ், இதேபோல் 5 முறை பட்டம் வென்றுள்ள மும்பை இந்தியன், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன. சேப்பாக்கம் மைதானத்தில் நாளை இரவு 8 மணிக்கு தொடங்கி நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த நிலையில், ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே. அணிக்காக 5 சாம்பியன் கோப்பைகளை வென்ற தோனி, கேப்டன் பொறுப்பை விட்டுகொடுத்துள்ளார். நாளை முதல் போட்டி நடைபெறவுள்ள நிலையில் சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் அறிவிக்கப்பட்டுள்ளார். 2019 முதல் சென்னை அணியில் விளையாடும் ருதுராஜ் இதுவரை 52 போட்டிகளில் விளையாடி 1797 ரன்கள் எடுத்துள்ளார். இதற்கு முன்னர் கடந்த 2022-ல் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகினார். ஜடேஜா அணியை வழிநடத்திய நிலையில் மீண்டும் தோனியே கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இந்த நிலையில் சென்னை அணியின் அடுத்த கேப்டன் என்ற பேச்சுகளுக்கு மத்தியில் ருதுராஜ் கெய்க்வாட் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். கேப்டன் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டதால் நடப்பு ஐபிஎல் சீசனில் தோனி விளையாடுவாரா என சந்தேகம் எழுந்துள்ளது.

The post CSK அணிக்காக 5 சாம்பியன் கோப்பைகளை வென்ற தோனி, கேப்டன் பொறுப்பில் இருந்து விடுவிப்பு : புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Dhoni ,CSK ,Ruduraj Gaikwad ,Chennai ,Chennai Super Kings ,17th IPL series ,Dinakaran ,
× RELATED எம்எஸ் தோனியை டி20 உலகக் கோப்பை அணியில்...