நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பட்டியலினத்தை சேர்ந்தவர்களுக்கு முடிவெட்ட மறுத்த கடை உரிமையாளர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர். புதுசத்திரம் அருகே உள்ள காமராஜர் நகரை சேர்ந்த அருண் பாண்டியன் தனது 2 மகன்களுக்கும் முடி வெட்டுவதற்காக திருமலைப்பட்டி கிராமத்தில் உள்ள சலூன் கடைக்கு சென்றுள்ளார்.
அப்போது கடை உரிமையாளர் முத்து பட்டியலினத்தவருக்கு முடி வெட்ட கூடாது என ஊர் கட்டுப்பாடு இருப்பதாக கூறியுள்ளார். இதனை அடுத்து அருண் பாண்டியன் அளித்த புகாரின் பேரில் கடை உரிமையாளர் மற்றும் ஊர் கட்டுப்பாடு விதித்த செல்வராசு, ராஜேஷ்குமார் ஆகியோரை பட்டியலினத்தோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்தனர்.
The post நாமக்கல் மாவட்டத்தில் பட்டியலின சிறுவர்களுக்கு முடிவெட்ட மறுத்த கொடுமை: மூன்று பேர் கைது appeared first on Dinakaran.