×

நாம் தமிழர் கட்சிக்கு எந்த சின்னம் கொடுத்தாலும் பிரச்சினையில்லை; வெற்றி பெறுவோம்: சீமான் பேட்டி

சென்னை: நாம் தமிழர் கட்சிக்கு எந்த சின்னம் கொடுத்தாலும் பிரச்சினையில்லை, வெற்றி பெறுவோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் அந்த கட்சியின் தலைவர் சீமான் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ‘கர்நாடகத்தை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது தன்னிச்சையானதோ, அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானதோ இல்லை’ என்று கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவுக்கு எதிராக சீமான் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனுவை தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு கடந்த 15ம் தேதி விசாரித்தது. வாதங்களை பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம், கரும்பு விவசாயி சின்னம் கோரும் நாம் தமிழர் கட்சியின் மேல்முறையீட்டு மனுவுக்கு ஏப்ரல் 1ம் தேதிக்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கும், பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்நிலையில், சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்; நாம் தமிழர் கட்சிக்கு எந்த சின்னம் கொடுத்தாலும் பிரச்சினையில்லை, வெற்றி பெறுவோம். எங்களுடைய சின்னத்தை வேறு ஒருவருக்கு கொடுத்து விட்டார்கள். மாற்றாக விவசாயத்தை முன்வைத்து ஒரு சின்னம் கேட்டால் அதையும் வேறு ஒருவருக்கு கொடுத்து விடுகிறார்கள் என்று சீமான் கூறியுள்ளார்.

The post நாம் தமிழர் கட்சிக்கு எந்த சின்னம் கொடுத்தாலும் பிரச்சினையில்லை; வெற்றி பெறுவோம்: சீமான் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Party ,Seaman ,CHENNAI ,Naam Tamilar Party ,chief coordinator ,Seeman ,Election Commission ,Lok Sabha ,
× RELATED மோடியின் நிழலில் இல்லை என்றால்...