×

ஜீயபுரம் அருகே பட்டாக்கத்தியை காட்டி மக்களை மிரட்டியவர் கைது

 

ஜீயபுரம், மார்ச்21: திருச்சி மாவட்டம், ஜீயபுரம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பேரூர் டாஸ்மாக் கடை அருகே ஒருவர் கையில் பட்டாக்கத்தியை வைத்துக் கொண்டு பொதுமக்களை அச்சுறுத்துவதாக அப்பகுதியினர் கடந்த 2 நாட்களுக்கு முன் மாவட்ட எஸ்பிக்கு ரகசிய தகவல் கொடுத்தனர். எஸ்பி வருண்குமார் உத்தரவின்பேரில் ஜீயபுரம் டிஎஸ்பி பாலச்சந்தர் அறிவுரையின்படி சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் பேரூர் பகுதியில் ரகளையில் ஈடுபட்ட கோப்பு கீழத்தெருவை சேர்ந்த கண்ணன் மகன் பிரசாந்த் (20) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஆயுதம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து பிரசாந்தை நீதிமன்ற காவலில் அனுப்பி வைத்தனர். மேலும் சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய நபருடன் தனக்கு நெருக்கம் அதிகம் என்றும், தான் ஒரு பிரபலமான ரவுடி என்றும் சமூக வலை தளங்களில் பிரசாந்த் பதிவுகளை வெளியிட்டு விளம்பரம் செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

The post ஜீயபுரம் அருகே பட்டாக்கத்தியை காட்டி மக்களை மிரட்டியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Jeeyapuram ,Trichy district ,Perur Tasmac ,SP ,
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...