×

உதயமார்த்தாண்டபுரம் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

 

முத்துப்பேட்டை, மார்ச் 20: உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி பள்ளி தலைமையாசிரியர் சாந்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் மாணவர்கள் அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க முன்வர வேண்டும். அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்ப்பதால் அரசிடமிருந்து கிடக்கும் பலன்கள் குறித்தும் விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பி ஊர்வலமாக சென்றனர்.
முன்னதாக பேரணி பள்ளியிலிருந்து துவங்கி கடைத்தெரு, ரயில்வே ஸ்டேசன், தெற்கு தெரு, கீழக்காடு பகுதிகளின் வழியாக சென்று மீண்டும் பள்ளிக்கு வந்தடைந்தது. இதில் பள்ளி ஆசிரியர்கள் சிவகுமார், சரவணகுமார், உமாபதி, பரமேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

The post உதயமார்த்தாண்டபுரம் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Udayamarthandapuram Government School Admission Awareness Rally ,Muthuppet ,Udayamarthandapuram Panchayat ,Union Middle School ,Udayamarthandapuram ,Panchayat Union Middle School ,Shanti ,Dinakaran ,
× RELATED வாக்கு சாவடிக்குள் புகுந்து வாக்காளர்களை விரட்டிய குடிமகனால் பரபரப்பு