திருவாரூர், மார்ச் 20: திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மனு பெட்டியில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்குமாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி கலெக்டர் அலுவலகங்களில் வாரம் தோறும் திங்கள்கிழமைகளில் நடைபெற்று வந்த பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் மற்றும் மாதம் தோறும் நடைபெற்று வந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கூட்டம் உள்ளிட்டவைகள் அனைத்தும் தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படி ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் கலெக்டர் அலுவலகங்களில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளிப்பதற்காக மனுபெட்டிகள் வைக்கப்பட்டுள்ள நிலையில் திருவாரூர் கலெக்டர் அலுவலகத்திலும் இதேபோன்று மனு பெட்டியானது வைக்கப்பட்டுள்ளதையடுத்து இந்த பெட்டியில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். இவ்வாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.
The post பருத்தி சாகுபடிக்கு புழுதி உழவு மனு பெட்டியில் பொதுமக்கள் கோரிக்கை மனு அளிக்கலாம் appeared first on Dinakaran.