×

பொன்னமராவதி அருகே மாங்காளிபட்டியில் ஊருக்குள் புகுந்த 40 குரங்குகள்

 

பொன்னமராவதி, மார்ச் 20: பொன்னமராவதி அருகே மாங்காளிபட்டியில் ஊருக்குள் அட்டகாசம் செய்த குரங்குகளை வனத்துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட்டனர். பொன்னமராவதி அருகே மாங்காளிபட்டியில் வாழ்விட பகுதியில் குரங்குகள் அட்டகாசம் செய்வதாக வனத்துறையினரிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். இதனையடுத்து மாவட்ட வன அலுவலர் கணேசலிங்கம் உத்தரவின்படி பொன்னமராவதி வனச்சரக அலுவலர் ராமனாதன் தலைமையில் வனவர்கள் ஜெயக்குமார், கார்த்தி ஆகியோர் அட்டகாசம் செய்த 40 குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட்டனர். இதனால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

The post பொன்னமராவதி அருகே மாங்காளிபட்டியில் ஊருக்குள் புகுந்த 40 குரங்குகள் appeared first on Dinakaran.

Tags : Mangalipatti ,Ponnamaravati ,Dinakaran ,
× RELATED பொன்னமராவதி குப்பைக் கிடங்கில்...