×

மீஞ்சூர் பகுதியில் இருவேறு இடங்களில் மதுபான பார் ஊழியர்களை தாக்கி ரவுடி கும்பல் பணம் பறிப்பு: போலீஸ் வலை

பொன்னேரி: மீஞ்சூர் பகுதியில் இருவேறு இடங்களில் மதுபான பார் ஊழியர்களை சரமாரியாக தாக்கிவிட்டு பணத்தை பறித்துக் கொண்டு தப்பிய ரவுடி கும்பலை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். மீஞ்சூர் அடுத்த கொக்குமேடு பகுதியில் அரசு அனுமதி பெற்ற மது பார் இயங்கி வருகிறது. இங்கு ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரேம்நாத் (21) என்பவர் நேற்றுமுன்தினம் மாலை பணியில் இருந்தார். அப்போது, சில மர்ம நபர்கள் மதுவாங்கி குடித்து விட்டு பணம் கொடுக்க மறுத்தனர்.

பணம் கேட்ட பிரேம்நாத்தை மர்ம நபர்கள் ஆத்திரத்தில் சரமாரியாக பீர் பாட்டிலால் அடித்தனர். மேலும் கத்தியால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். படுகாயமடைந்த பிரேம்நாத்தை, அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோன்று, மீஞ்சூர் அடுத்த பட்டமந்திரி பகுதியில் அரசு அனுமதி பெற்ற மது பார் இயங்கி வருகிறது. இங்கு நேற்றுமுன்தினம் மாலை மீஞ்சூர் ஜெகஜீவன் ராம் நகரைச் சேர்ந்த ஜெயின் (36) என்பவர் பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல், மது அருந்திவிட்டு பணம் கொடுக்க மறுத்துள்ளது.

பணம் கேட்ட ஜெயினை அந்த கும்பல் சரமாரியாக பீர் பாட்டில், கத்தியால் தாக்கிவிட்டு அவர் வைத்திருந்த ரூ.2 ஆயிரத்தை பறித்துக் கொண்டு அங்கிந்து தப்பினர். இதில், படுகாயமடைந்த ஜெயினை அக்கம் பக்கத்தினர் மீட்டு வண்ணாரப்பேட்டை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மீஞ்சூர் பகுதியில் இருவேறு இடங்களில் மதுபான பார் ஊழியர்களை தாக்கி ரவுடி கும்பல் பணம் பறிப்பு: போலீஸ் வலை appeared first on Dinakaran.

Tags : Meenjoor ,Police Web ,Ponneri ,Kokumedu ,Meenjur ,Dinakaran ,
× RELATED இன்று அதிகாலை பயங்கரம்; மீஞ்சூரில்...