×

மணவாளநகரில் தூக்கத்திலேயே உயிரிழந்த 27 வயது இளைஞர்: போலீசார் விசாரணை

திருவள்ளூர்: மணவாளநகரில் தூக்கத்திலேயே 27 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தாரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் கணேச நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணன் (54). இவரது மகன் தினேஷ் ரமணி (27).

கூலி வேலை செய்து வந்த இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வீட்டு ஹாலில் தினேஷ் ரமணி படுத்து தூங்கியுள்ளார். மறுநாள் காலை 6 மணியளவில் தினேஷ் ரமணியின் தம்பியான ஆழ்வார் என்பவர், தனது அண்ணன் தினேஷ் ரமணியை எழுப்பியுள்ளார். ஆனால் தினேஷ் ரமணி உடல் அசைவின்றி இருந்ததால் அவர் அதிர்ச்சியடைந்தார்.

இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தினேஷ் ரமணியை திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே தினேஷ் ரமணி இறந்து விட்டதாக தெரிவித்தனர். வழக்கம்போல் வீட்டில் படுத்து தூங்கிய 27 வயது இளைஞர் தூக்கத்திலேயே உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. மாரடைப்பு காரணமாக தினேஷ் ரமணி உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து மணவாள நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மணவாளநகரில் தூக்கத்திலேயே உயிரிழந்த 27 வயது இளைஞர்: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Manavalanagar ,Tiruvallur ,Narayanan ,Ganesa Nagar ,Thiruvallur ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...