×

ரோந்து காவலரை தாக்க முயன்ற வாலிபர் கைது

புழல்: தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளதையொட்டி, ஆர்.கே.நகர் காவல் நிலைய போலீசார் நேற்று முன்தினம் இரவு கொருக்குப்பேட்டை சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, வாலிபர் ஒருவர் அங்கு மது அருந்திக் கொண்டிருந்தார். அவரிடம் ரோந்து போலீசார், இங்கு மது அருந்தக்கூடாது, வீட்டுக்கு செல்லுங்கள் என்று கூறியுள்ளனர்.

போதையில் இருந்த அந்த வாலிபர், போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டதுடன், கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் காவலரை அடிக்க முயன்றார். அவரை மடக்கிப் பிடித்து ஆர்.கே.நகர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அதில், அவர் கொடுங்கையூர் எழில் நகரை சேர்ந்த சீனிவாசன் (25) என்பது தெரிந்தது. ரோந்து வாகன காவலர் கோகுலன் கொடுத்த புகாரின் பேரில் சீனிவாசனை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைந்தனர்.

The post ரோந்து காவலரை தாக்க முயன்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Puzhal ,RK Nagar police station ,Korukuppet chalk canal ,Dinakaran ,
× RELATED புழல் சிறையில் பரபரப்பு காவலருக்கு...