×

தண்ணீர் தேடி குடியிருப்புக்கு வந்த புள்ளிமான் மீட்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த அஞ்சூர் புதுகிராமம் வனப்பகுதியில் இருந்து 2 வயதுடைய ஆண் மான் வனப்பகுதியில் இருந்து நேற்று குடியிருப்பு பகுதிக்கு வந்தது. நாய்கள் தொடர்ந்து புள்ளி மானை துரத்தியதால் பொதுமக்கள் அதனை பாதுகாப்பாக பிடித்து வைத்துக்கொண்டனர்.

புள்ளிமான் ஊருக்குள் வந்தது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து, செங்கல்பட்டு வனசரகர் தலைமையிலான வனத்துறை குழுவினர் அஞ்சூர் புதுகிராமத்தில் பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த இரண்டு வயது ஆண் புள்ளி மானை மீட்டு வனப்பகுதிக்குள் வீட்டுச் சென்றனர்.

The post தண்ணீர் தேடி குடியிருப்புக்கு வந்த புள்ளிமான் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Anjur Pudugram forest area ,
× RELATED நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு மாற்றம்..!!