×

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சிலம்பாட்ட போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு

கூடுவாஞ்சேரி: உலக மகளிர் தினத்தை யொட்டி நடைபெற்ற சிலம்பாட்ட போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.  கூடுவாஞ்சேரி-நெல்லிக்குப்பம் சாலை ஓரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் சிலம்பாட்ட போட்டி நேற்று முன்தினம் நடந்தது. மாவட்ட சிலம்பாட்ட கழக தலைவர் உதயகுமார், 27வது வார்டு கவுன்சிலர் கலைச்செல்வன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

இதில், மகளிர் அணி செயலாளர் தேவிசெந்தில்குமார் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக நகர மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக்தண்டபாணி, துணை தலைவர் லோகநாதன், நிர்வாகி கராத்தே பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டு பெண்களுக்கான சிலம்பாட்டம் உள்ளிட்ட போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்து வெற்றி பெற்ற 380 மாணவிகளுக்கு பரிசு, பதக்கங்கள், கேடயம் மற்றும் பாராட்டு சான்றிழ்களை வழங்கினர். இதற்கு முன்னதாக பெண்களுக்கான இலவச பொது மருத்துவ முகாம் நடத்தப்பட்டன.

The post உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சிலம்பாட்ட போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு appeared first on Dinakaran.

Tags : International Women's Day ,Panchayat Union ,Primary ,School ,Guduvancheri-Nellikuppam road ,
× RELATED புதுக்கோட்டை அருகே மீண்டும்...