×

இந்தியா கூட்டணி கட்சிகள் கலந்தாலோசனை கூட்டம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற பாடுபடுவோம் : சுந்தர் எம்எல்ஏ பேச்சு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி, இந்தியா கூட்டணி கட்சிகளின் கலந்தாலோசனை கூட்டத்தில், அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் வகையில் நாம் பாடுபட வேண்டும் என எம்எல்ஏ சுந்தர் பேசினார். காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி, இந்தியா கூட்டணி கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கலந்தாலோசனை கூட்டம் காஞ்சிபுரம் கலைஞர் பவளவிழா மாளிகையில் நேற்று நடைபெற்றது. திமுக மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார்.

காஞ்சிபுரம் எம்பி க.செல்வம் முன்னிலை வகித்தார். மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன் வரவேற்றார். கூட்டத்தில், பாசிச மோடி அரசை வீழ்த்துவதற்கு, அகில இந்திய அளவில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்தியா கூட்டணி சார்பில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தனி தொகுதிக்கு திமுக போட்டியிடுவதற்கு ஆதரவு தெரிவித்து, கூட்டணி கட்சி தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

கலந்தாலோசனை கூட்டத்தில் எம்எல்ஏ சுந்தர் பேசுகையில், ‘நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் அறிவிக்கப்படும் வேட்பாளர்கள், அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறும் வகையில் நாம் பாடுபட வேண்டும். பாசிச மோடி அரசை வீழ்த்துவதற்கு, அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றிபெறும். அதற்கு முன்னோட்டமாக, தமிழ்நாடு மற்றும் புதுவை 40 தொகுதிகளில் மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற நாம் அனைவரும் உழைக்க வேண்டும்’ என்றார்.

இக்கூட்டத்தில், காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி, நிர்வாகிகள் குமரகுருநாதன், நாதன், இந்திய முஸ்லிம் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர்கள் அல்லா பாஷா, சலீம் நாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் சி.சங்கர், நிர்வாகிகள் இ.முத்துக்குமார், கே.நேரு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பி.வி.ஸ்ரீனிவாசன் லட்சுமிபதி, மதிமுக சார்பில் கருணாகரன்,

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் தமிழரசு, நிர்வாகிகள் பாசறை செல்வராஜ், மதிஆதவன், தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் பொன்மொழி மற்றும் திமுக ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார், குமணன், படுநெல்லி பாபு, ஞானசேகரன் சேகர், சத்திய சாய், திமுக நிர்வாகிகள் ஆர்.டி.அரசு, வர்த்தக அணி துணை செயலாளர் வி.எஸ்.ராமகிருஷ்ணன், மாநகர பொருளாளர் சுப்பராயன், மாணவரணி துணை செயலாளர் ஏ.வி.சுரேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post இந்தியா கூட்டணி கட்சிகள் கலந்தாலோசனை கூட்டம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற பாடுபடுவோம் : சுந்தர் எம்எல்ஏ பேச்சு appeared first on Dinakaran.

Tags : INDIA ALLIANCE PARTIES ,SUNDAR MLA ,Kanchipuram ,MLA ,Sundar ,Kanchipuram Parliamentary Constituency ,India Coalition Parties ,District Secretaries ,Dinakaran ,
× RELATED திமுக வேட்பாளர் செல்வத்தை 5 லட்சம்...