×

தோழியின் குழந்தைகளை தாக்கியதாக தம்பதி மீது போலீசில் புகார்

பூந்தமல்லி: தோழியின் குழந்தைகளை தாக்கியதாக தம்பதியர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருவேற்காடு அன்பு நகரைச் சேர்ந்தவர் இந்திராணி. இவருக்கு 9 வயதில் மகளும், 7 வயதில் மகனும் உள்ளனர். கணவர் பிரிந்து சென்றநிலையில், தனது குழந்தைகளை அதே பகுதியில் உள்ள தனது தோழியின் வீட்டில் விட்டுவிட்டு கடந்த ஆறு மாதங்களாக இந்திராணி சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், குழந்தைகளை பராமரித்து வந்த இந்திராணியின் தோழியும், அவரது கணவரும் சேர்ந்து பெல்ட்டால் அடித்து குழந்தைகளை கொடுமைப்படுத்தியதாக அக்கம், பக்கத்தினர் குழந்தைகள் நல வாரியத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த குழந்தைகள் நல அதிகாரிகள் காயம் அடைந்த 2 குழந்தைகளையும் மீட்டனர்.

இதுகுறித்து திருவேற்காடு போலீசில் குழந்தைகள் நல அதிகாரிகள் புகார் அளித்தனர். அதன்பேரில், திருவேற்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர். குழந்தைகளை அடித்து கொடுமைப்படுத்தப்பட்டது உறுதியான பிறகு இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

The post தோழியின் குழந்தைகளை தாக்கியதாக தம்பதி மீது போலீசில் புகார் appeared first on Dinakaran.

Tags : Poontamalli ,Indrani ,Anbu Nagar, Tiruvekadu ,
× RELATED வாலிபரை வெட்டிய வழக்கில் நீதிமன்றத்தில் இருவர் சரண்