×

பாஜ அறிவிப்பால் எடப்பாடி ஷாக் அதிமுக சார்பில் ஓபிஎஸ் பேசுவாரு: மைக்கை பிடுங்கி அசிங்கப்படுத்தி அனுப்பிய நிர்வாகி

சேலத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டதில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக தலைவர் டிடிவி தினகரனுடன் இணைந்து மேடையேறினார். அவரை பாஜ மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் பேச அழைத்தார். அப்போது அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசுவார் என்று அறிவித்தார். இதனால் அரங்கில் பரபரப்பு நிலவியது. அப்போது பேச்சை ஆரம்பித்த ஓ.பன்னீர்செல்வம் மோடியை பாராட்டி சில நொடிகள் பேசிக்கொண்டிருந்தார். இந்தநேரத்தில் பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர் பொதுக்கூட்ட மைதானத்திற்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் அருகில் சென்ற கே.பி.ராமலிங்கம் பேச்சை நிறுத்துங்க என்று கூறி மைக் பிடுங்கினார். இதனால் மிரண்ட ஓபிஎஸ் உடனடியாக பேச்சை முடித்துக் கொண்டார்.

சமீப காலமாக இரட்டை இலை எங்களுக்குதான், அதிமுக ஒன்றிணையும் என்று ஓபிஎஸ் பேசி வருகிறார். இந்த சூழலில் அதிமுக பெயர், கட்சி கொடி, இரட்டை இலை பயன்படுத்த ஓபிஎஸ்சுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிரந்தர தடை விதித்தது. ஆனால், இரட்டை இலை சின்னத்தில் ஒரு முடிவு எடுக்க முடியவில்லை என்றால் அதை முடக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மோடி பங்கேற்ற கூட்டத்தில் அதிமுக சார்பில் ஓபிஎஸ் பேசுவாரு என்று பாஜ நிர்வாகி கூறியதால் எடப்பாடி ஷாக்கில் உள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி எடப்பாடி செல்லாததால், எடப்பாடி தனித்துவிடபட்டுள்ளார். தற்போது நடக்கும் அடுத்தடுத்து திருப்பங்களால் எடப்பாடி அண்ட் கோ அதிர்ச்சியில் உள்ளது.

The post பாஜ அறிவிப்பால் எடப்பாடி ஷாக் அதிமுக சார்பில் ஓபிஎஸ் பேசுவாரு: மைக்கை பிடுங்கி அசிங்கப்படுத்தி அனுப்பிய நிர்வாகி appeared first on Dinakaran.

Tags : Edappadi ,BJP ,ADMK ,Former ,Chief Minister ,O. Panneerselvam ,AAMK ,DTV ,Dhinakaran ,Modi ,Salem ,State ,Vice President ,KP Ramalingam ,AIADMK ,OPS ,Dinakaran ,
× RELATED மேற்கு மண்டல அதிமுகவில் உள்கட்சி...