×

பசுமாடு கழுத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து பலி செங்கம் அருகே பரபரப்பு வனவிலங்குகளை வேட்டையாடியபோது

செங்கம், மார்ச் 20: செங்கம் அருகே மர்மநபர்கள் வனவிலங்குகளை வேட்டையாடியபோது, பசுமாடு கழுத்தில் நாட்டுத்துப்பாக்கி குண்டு பாய்ந்து பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஆண்டிப்பட்டி ஊராட்சி வனப்பகுதியையொட்டி உள்ள பூ முல்லை கிராமத்தை சேர்ந்தவர் ராஜவேலு. இவர் தனது விவசாய நிலத்தில் பசு மாட்டை கட்டிவிட்டு நேற்றுமுன்தினம் இரவு வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது வனவிலங்குகளை வேட்டையாட வனப்பகுதியில் சுற்றி திரிந்து கொண்டிருந்த மர்ம நபர்கள் நாட்டுத்துப்பாக்கியால் சுட்டதில் கழுத்தில் குண்டு பாய்ந்து பசுமாடு பரிதாபமாக உயிரிழந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜவேலு, உடனடியாக மேல் செங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் மர்மநபர்கள் வன விலங்குகளை வேட்டையாட முயன்றபோது தவறுதலாக பசுமாட்டின் மீது குண்டு பாய்ந்திருக்கலாம் என தெரிகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி மர்மநபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post பசுமாடு கழுத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து பலி செங்கம் அருகே பரபரப்பு வனவிலங்குகளை வேட்டையாடியபோது appeared first on Dinakaran.

Tags : Pasumadu ,Bali Sengam ,Sengam ,Thiruvannamalai District ,Poo Mullai ,Andipatti Panchayat forest ,
× RELATED திமுக நிர்வாகி மீது பாமகவினர் தாக்குதல் போலீசார் தடியடி