×

மரக்காணம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம்

மரக்காணம், மார்ச் 20: மரக்காணம் அருகே ஈசிஆர் சாலையில் உள்ள பனிச்சமேடு பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஒரு நபர் இறந்து கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் மரக்காணம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். மரக்காணம் போலீசார், விசாரணை நடத்தியதில் இறந்து கிடந்தவர் உள்ளூரை சேர்ந்தவரில்லை என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்த நபர் ரோஸ் கலர் சட்டையும், பாக்கெட் வைத்த உள்ளாடை மட்டுமே அணிந்திருந்துள்ளார். இதனால் அந்த நபர் யார்? இங்கு ஏன் வந்தார்? தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வெயில் தாங்க முடியாமல் மாரடைப்பால் இறந்து விட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை ஆய்வுக்குப் பிறகு அந்த நபரின் இறப்பிற்கான உண்மை தகவல் தெரியவரும் என போலீசார் கூறுகின்றனர்.

The post மரக்காணம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் appeared first on Dinakaran.

Tags : Marakkanam ,Banichamedu ,ECR ,Marakanam ,Dinakaran ,
× RELATED காரில் போதை பவுடருடன் வந்த அதிமுக...