×

வன்னியர்களின் இடஒதுக்கீட்டுக்கு எதிரான பாஜவுடன் பாமக கூட்டணி வைப்பதா?காடுவெட்டி குரு மகள் ஆவேசம்

சென்னை: காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை கூறியதாவது: சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிராக மற்றும் வன்னியர்களின் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக இருக்கும் பாஜவுடன் பாமக கூட்டணி அமைத்து இருப்பது ஏற்கத்தக்கது அல்ல. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் கலவரம் ஏற்படும் என்று தற்குறித்தனமாக கூறும் அண்ணாமலை தலைமையிலான பாஜவுடன் கூட்டணி வைப்பதால் வன்னியர் மக்களுக்கு என்ன பயன்? ராமதாஸ் தன்னுடைய அன்பு மகனுக்கு ஒன்றிய அமைச்சர் பதவி வேண்டும் என்றால் தந்தையும் மகனும் வேண்டுமென்றால் பாஜ கட்சியில் இணைந்து கொள்ள வேண்டியதுதானே? ஏன் என் பின்னாடி வன்னியர் சமூகம் உள்ளது என வன்னிய மக்களை ஏமாற்றுகிறீர்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

* கட்சியிலிருந்து விலகல்:

நாடாளுமன்ற தேர்தலில் பாஜவுடன் கூட்டணி இறுதியான நிலையில் பாமகவில் இருந்து வரிசையாக விலகுவதாக இணையத்தில் பாமக தொண்டர்கள் பதிவு செய்து வருகின்றனர்.பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி, பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பாஜ – பாமக இடையிலான கூட்டணி ஒப்பந்தம் நேற்று காலை கையெழுத்தானது. பாஜவுடன் கூட்டணி உறுதியான நிலையில் கட்சியில் இருந்து வரிசையாக விலகுவதாக இணையத்தில் பாமக தொண்டர்கள் பதிவு செய்து வருகின்றனர்.‘கண்டிப்பாக பாஜ கூட்டணிக்கு ஓட்டு போடமாட்டோம். இடஒதுக்கீடு துரோகிகளுக்கு என்றும் ஓட்டு இல்லை, வன்னியர் ஓட்டு பாஜவுக்கு இல்லை’ என விமர்சனம் செய்து கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். மேலும் சிலர் ‘பாமக அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகி கொள்கிறேன். யார் மீதும் எந்த கோபமும் இல்லை. இது எனது தனிப்பட்ட முடிவு’ என்று பதிவு செய்து வருகின்றனர்.

The post வன்னியர்களின் இடஒதுக்கீட்டுக்கு எதிரான பாஜவுடன் பாமக கூட்டணி வைப்பதா?காடுவெட்டி குரு மகள் ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : BJP ,Vanniyars ,Kaduvetti Guru ,CHENNAI ,Vridhambhikai ,Awesam ,
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...