×

மோடி பேரணியில் பள்ளி மாணவர்கள்: கோவை தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை

கோவை: கோவையில் பிரதமர் மோடி பேரணியில் மாணவர்களை பங்கேற்க வைத்த தனியார் பள்ளி தலைமை ஆசிரியர், பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மோடி பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற காட்சிகள் வெளியானதை அடுத்து கோவை தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை. கோவையில் உள்ள அரசு உதவிப்பெறும் பள்ளியான ஸ்ரீ சாய்பாபா வித்யாலயம் மாணவர்கள் நேற்று மோடி பேரணியில் பங்கேற்க வைக்கப்பட்டனர். பள்ளி மாணவர்களை தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ளது.

 

The post மோடி பேரணியில் பள்ளி மாணவர்கள்: கோவை தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Modi rally ,Coimbatore Election Officer District Collector ,Coimbatore ,Modi ,
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்