×

பார் ஊழியர்களுக்கு அரிவாள் வெட்டு

மீஞ்சூர்: இருவேறு இடங்களில் டாஸ்மாக் பாரில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் பார் ஊழியர்களுக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டுள்ளது. பட்டமந்திரி பாரில் ஊழியர் ஜெயினை அரிவாளால் வெட்டி மதுபாட்டில்கள், ரூ.2,000 பறித்துக் கொண்டு மர்மகும்பல் தப்பியோடியது. கொக்குமேடு டாஸ்மாக் பாரில் ஊழியர் பிரேம்நாத்தை அரிவாளால் வெட்டிவிட்டு மர்மகும்பல் தப்பியோடியது. அரிவாள் வெட்டில் காயமடைந்த பார் ஊழியர்கள் 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

The post பார் ஊழியர்களுக்கு அரிவாள் வெட்டு appeared first on Dinakaran.

Tags : Tasmak bar ,Pattamantri bar ,Jain ,Kokumedu Tasmak Bar ,Dinakaran ,
× RELATED ஆவடி அருகே பூச்சி அத்திப்பேடில்...