×

திருப்புவனத்தில் பைக்கில் இருந்த பணம் திருட்டு: போலீசார் விசாரணை

 

திருப்புவனம், மார்ச் 19: திருப்புவனத்தில் பேங்கில் இருந்து ஒரு லட்சம்பணத்தை எடுத்து ஸ்கூட்டியின் டிக்கியில் வைத்திருந்த பணம் ரூ.50 ஆயிரத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கொத்தங்குளத்தை சேர்ந்த பழனிச்செல்வி(29). திருப்புவனம் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் விவசாய கடன் அலுவலராக வேலை பார்த்து வருகிறார்.

அவரது தோழி சுபஸ்ரீ (30) இருவரும் லாடனேந்தல் பகுதியில் உள்ள வங்கியில் ரூ. 1 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு டூவீலரில் திருப்புவனத்திற்கு சென்றனர். அப்போது திருப்புவனம் புதூர் குயவன் கோவில் தெரு பகுதியில் டூவீலரை நிறுத்திவிட்டு, திரும்பி வந்து பார்த்தபோது டூவீலரில் இருந்த ஒரு லட்சத்தில் ரூ.50 ஆயிரம் திருடு போயிருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து இதுகுறீத்து பழனிச்செல்வி திருப்புவனம் போலீசில் அளித்த புகாரின் பேரில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

The post திருப்புவனத்தில் பைக்கில் இருந்த பணம் திருட்டு: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Thirupuvanam ,Tiruppuvanam ,Palanichelvi ,Kothankulam ,Tiruppuvanam, Sivagangai District ,Tiruppuvanam… ,Dinakaran ,
× RELATED திருப்புவனம் பேரூராட்சியில் தேர்தலில் 8 ஆயிரம் பேர் வாக்களிக்க வரவில்லை