ஓசூர், மார்ச் 19: திமுக இளைஞரணி சார்பில், ஓசூரில் வார் ரூம் திறப்பு விழா நடைபெற்றது.ஓசூர் உழவர் சந்தை சாலையில் உள்ள தனியார் கட்டிடத்தில், திமுக வழக்கறிஞரணி சார்பில், வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வழக்கறிஞரணி மாவட்ட அமைப்பாளர் திம்மராயப்பா தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அப்போது, அவர் பேசுகையில், ‘தேர்தல் பிரச்னைகளை உடனுக்குடன் சந்தித்து தீர்வு காண, இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதி, கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு, திமுக தலைவரின் கரம் வலுப்பெற முழு முயற்சியுடன் களப்பணியாற்ற வேண்டும். திமுக கூட்டணி 40 தொகுதியிலும் வெற்றி பெற வேண்டும். எண்ணற்ற திட்டங்களை தமிழக முதல்வர் நிறைவேற்றி சாதனை படைத்துள்ளார். அதனை மக்கள் முன் வைத்து, ஆதரவு திரட்டி கூட்டணி கட்சி வேட்பாளர் வெற்றிக்கு பாடுபட வேண்டும்,’ என்றார். நிகழ்ச்சியில், துணை மேயர் ஆனந்தய்யா, மாவட்ட பொருளாளர் சுகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் எல்லோரமணி, மாதேஸ்வரன், இக்ரம் அகமது, பிரகாஷ், சுமன், ராஜா, சக்திவேல், ராமு, செந்தில்குமார், கோபாலகிருஷ்ணன், மோசின்தாஜ் நிசார், வழக்கறிஞர்கள் பாரதி, தமிழ்நாதன், முனிசந்திரா, ஜெய்சீலன், திம்மராஜ், ஸ்ரீராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
The post ஓசூரில் வார் ரூம் திறப்பு appeared first on Dinakaran.