×

டெக்ஸ்டைல் தொழிலாளி வீட்டில் 13 பவுன் திருட்டு

 

கிருஷ்ணராயபுரம், மார்ச் 19:கிருஷ்ணராயபுரம் அருகே டெக்ஸ்டைல் தொழிலாளி வீட்டில் 13 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே மேட்டுமகாதானபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமன் மகன் சின்ராஜ் (28). கரூரில் தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் தற்போது பழைய ஜெயங்கொண்டசோழபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஓமாந்தூர் வடக்கு பகுதியில் வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தல் மர்ம நபர் வீட்டின் கதவின் பூட்டை உடைத்து வீட்டிற்குள் பீரோவில் வைத்திருந்த 13 சவரம் தங்க நகை, வெள்ளி கொலுசு (ஒன்று), வெள்ளி அருணா (ஒன்று) மற்றும் ரூ.10 ஆயிரம் பணம் ஆகியவற்றை திருடிச் சென்றனர். திருட்டுபோன நகைகளின் மதிப்பு ரூ.4.50 லட்சம் இருக்கும் எனக்கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து லாலாபேட்டை போலீசில் சின்ராஜ் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர். தர் தலைமையிலான போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post டெக்ஸ்டைல் தொழிலாளி வீட்டில் 13 பவுன் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Krishnarayapuram ,Raman ,Sinraj ,Mettumagadhanapuram ,Karur district ,Karur ,
× RELATED கிருஷ்ணராயபுரம் பகுதியில் சொட்டுநீர்...