×

கடன் பிரச்னையால்கணவனுடன் போனில் தகராறு மனைவி தூக்கிட்டு தற்கொலை

 

சமயபுரம், மார்ச் 19: மண்ணச்சநல்லூரில் கடன் பிரச்னை தொல்லையால் கேரளாவில் வேலை செய்யும் கணவருடன் போனில் தகராறு செய்த மனைவி மன உளைச்சலால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மண்ணச்சநல்லூர் ஜம்புநகர் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம் (38). இவர் கேரள மாநிலத்தில் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு குளித்தலை பகுதியைச் சேர்ந்த மோகனபிரியா (27) என்பவருடன் திருமணமாகி தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மாணிக்கம் உள்ளூரில் கடன் பிரச்னையால் கடந்த ஆறு மாதத்திற்கு முன் கேரளாவில் வேலைக்கு சென்றார். இந்நிலையில் கடன்கொடுத்தவர்களின் நெருக்கடி குறித்து மனைவி மோகனபிரியா கணவரிடம் போனில் பேசி சண்டை போட்டு வந்துள்ளார். இதன் காரணமாக மாணிக்கம் கடந்த 2 நாட்களாக மனைவிடம் பேசவில்லை என்று கூறப்படுகிறது.

கடன் நெருக்கடி மற்றும் கணவர் தன்னிடம் பேசாததால் மன உளைச்சல் அடைந்த மோகனபிரியா நேற்று வீட்டின் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தொங்கினார். இதனைக்கண்ட அவரது இரண்டு குழந்தைகளும் சத்தம்போட்டு அழுதனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்து மோகனபிரியாவை மீட்டு சிகிச்சைக்காக ரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிர் இழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு குழந்தைகளின் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

The post கடன் பிரச்னையால்கணவனுடன் போனில் தகராறு மனைவி தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Samayapuram ,Manchanallur ,Kerala ,Manikam ,Mannachanallur Jambunagar ,
× RELATED திருச்சி சமயபுரம் மாரியம்மன்...