சீர்காழி, மார்ச் 19: சீர்காழி அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த விஷ வண்டுகள் தீயிட்டு அழிக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புதுத்துறை ஊராட்சி வடக்குவெளி தெருவில் ஒரு பனை மரத்தில் விஷ வண்டுகள் கூடு கட்டி பொதுமக்களை அச்சுறுத்தி வந்தன. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வந்தனர். இதனைத் தொடர்ந்து ஊராட்சி தலைவர் அளித்த தகவலில் பேரில் பாம்பு பாண்டியன் சம்பவ இடத்திற்கு சென்று கூடு கட்டி இருந்த விஷ வண்டிகளை தீப்பந்தம் மூலம் தீயிட்டு அழித்தார். இதனால் அந்த பகுதியில் வசிப்பவர்கள் நிம்மதியடைந்துள்ளனர்
The post சீர்காழி அருகே விஷ வண்டுகள் அழிப்பு appeared first on Dinakaran.