×

மரத்தில் பைக் மோதி லாரி டிரைவர் பலி

 

தா.பேட்டை, மார்ச் 19: தா.பேட்டை அருகே புளியமரத்தில் பைக் மோதிய விபத்தில் லாரி டிரைவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டம், தா.பேட்டை அடுத்த சக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராசு. இவரது மகன் லாரி டிரைவர் செந்தில்குமார் (40). இந்நிலையில் நேற்று சொந்த வேலை காரணமாகை பைக்கில் தா.பேட்டை கடை வீதிக்கு வந்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

தா.பேட்டை – துறையூர் சாலையில் சக்கம்பட்டி அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக சாலையோர புளிய மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் செந்தில்குமார் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தா.பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் லதா மற்றும் போலீசார் செந்தில்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

The post மரத்தில் பைக் மோதி லாரி டிரைவர் பலி appeared first on Dinakaran.

Tags : Tha Pettai ,Thangarasu ,Chakkampatti ,Thapet, Trichy district ,
× RELATED ஆண்டிபட்டி அருகே முத்து மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம்