×

மானூர் அருகே வாலிபரை தாக்கிய 3பேருக்கு வலை

மானூர்,மார்ச் 19: மானூர் அருகே ரஸ்தாவைச் சேர்ந்தவர் தெற்குஉடையான் மகன் சிவன் (21). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த சேகர் மகன் செல்வம் (25) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சிவன் தனது வீட்டின் அருகிலுள்ள அவரது அக்கா வீட்டில் திருமண விசேஷம் என்பதால் தூய்மை பணி மேற்கொண்டார். அப்பகுதியில் செல்வம் ஏற்கனவே வீட்டு வேலைக்காக மணல் குவித்து வைத்துள்ளார். இதனை ஓரமாக தள்ளி வைத்ததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அப்போது குமாரவேல் மகன் மனோ (22), ஜான் மகன் சதீஸ் (27) ஆகிய மூவரும் சேர்ந்து சிவனை சரமாரியாக தாக்கினர். இதில் அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டார். இது குறித்து சிவன் கொடுத்த புகாரின் பேரில் மானூர் எஸ்ஐ விஜயகுமார் மூவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post மானூர் அருகே வாலிபரை தாக்கிய 3பேருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Manoor ,Shiva ,Rasta ,Sekar ,Selvam ,
× RELATED அக்னி நட்சத்திரத்தை ஒட்டி சிவன்...