- பாஜக
- இந்தியா
- செல்வப்பெருந்தக்காய்
- சென்னை
- தமிழ்நாடு காங்கிரஸ்
- ஜனாதிபதி
- செல்வப்பெருந்தகாய்
- மும்பை
- ராகுல் காந்தி
- அகில இந்திய கட்சி
- செல்வாப்பேருந்தாள்
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மும்பையில் இருந்து நேற்று காலை விமானத்தில் சென்னை வந்தார். அங்கு அவர் அளித்த பேட்டி: ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். இந்தியா கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் இந்திய தேசத்தை பாதுகாக்க வேண்டும் என எழுச்சியுரை ஆற்றி பேசினார்கள். இதனால் மும்பை உள்பட நாடு முழுவதும் ஒரு எழுச்சி ஏற்பட்டுள்ளது. தேர்தல் நிதி பத்திர விவகாரத்தில், பாஜ என்ன கணக்குகளை சொன்னாலும், உச்ச நீதிமன்றம் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்று சொன்ன பின்பு பொதுவெளியில் வெளியிட ஏன் அச்சப்பட்டார்கள். ஸ்டேட் பேங்க் வாய்தா வாங்கியது ஏன்? பயம் இல்லை என்றால், நேர்மையாக இருந்தால், வெளியிட்டு இருக்க வேண்டியதுதானே.
நேர்மை தவறி எப்படியாவது தேர்தலுக்கு முன்பு வெளியிடுவதை தவிர்க்கதிட்டமிட்டார்கள், ஆனால் உச்ச நீதிமன்றம் தலையிட்டதால், வேறு வழியின்றி வெளியிட்டார்கள். ரூ.500 கோடி முதலீடு செய்த ஒரு நிறுவனம், ரூ.400 கோடி தேர்தல் நிதி தந்தது எப்படி? இது பற்றி போகப் போக மக்களுக்கு உண்மை தெரிய வரும். பாஜ தேர்தல் நிதி பத்திரத்தில், மிகப்பெரும் தவறு செய்துள்ளது. பகை நாடுகள், இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் வெளிநாடுகள் போன்றவைகளில் இருந்தும், பாஜவுக்கு நிதி வந்ததாக சொல்கின்றனர். இந்தியாவிலேயே மிகப்பெரிய ஒரு ஊழல், பாஜ தேர்தல் நன்கொடை பத்திரம் தான். இதுபற்றி இப்போது, வடமாநில மக்களும் கேள்வி கேட்கத் தொடங்கி விட்டனர். பாஜ அதற்கு பதில் சொல்லி ஆக வேண்டும்.
The post பாஜ தேர்தல் நன்கொடை பத்திரம்தான் இந்தியாவிலேயே மிகப்பெரிய ஊழல்: செல்வப்பெருந்தகை பேட்டி appeared first on Dinakaran.