×

செயின் பறிக்க முயன்ற ரவுடி கைது

துரைப்பாக்கம்: வியாசர்பாடி, சாமியார் தோட்டம் 2வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பழனியம்மாள் (40). இவர், வியாசர்பாடி சி- கல்யாணபுரம் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் காலை வழக்கம்போல அம்மா உணவகத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர், பழனியம்மாள் அணிந்து இருந்த இரண்டரை சவரன் செயினை, பறிக்க முயன்றுள்ளார். உடனடியாக பழனியம்மாள் சாலைக்கு ஓடி வந்து கூச்சலிட்டுள்ளார்.

இதனால், அந்த நபர் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். இதுகுறித்து பழனியம்மாள் வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதில், செயின் பறிப்பில் ஈடுபட முயன்றவர் கொடுங்கையூர் எழில் நகரைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி அஜய் (எ) மண்ணு மூட்டை (21) என்பதும், இவர் மீது ஏற்கனவே கொடுங்கையூர், எம்கேபி நகர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 10 குற்ற வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது. இதனையடுத்து நேற்று அஜய்யை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post செயின் பறிக்க முயன்ற ரவுடி கைது appeared first on Dinakaran.

Tags : Duraipakkam ,Palaniammal ,2nd Cross Street, Samiyar Estate, Vyasarpadi ,Amma Restaurant ,Vyasarpadi C- Kalyanapuram ,
× RELATED என்னை நாடாளுமன்றத்துக்கு அனுப்பினால்...