×

செங்கல்பட்டில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் கூட்டம்: கலெக்டர் தலைமையில் நடந்தது

 

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி அனைத்து கட்சி பிரிதிநிதிகள் கூட்டம் கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் நடந்தது. செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிகு உட்பட்ட ஸ்ரீபெரும்புத்தூர், அம்பத்தூர், மதுரவாயல், தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய திமுக, அதிமுக, காங்கிரஸ், விசிக போன்ற அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அலுவலருமான அருண்ராஜ் தலைமையில் ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் தேர்தல் கால நடைமுறைகள் மற்றும் பின்பற்றக்கூடிய நடத்தை நெறிமுறைகள் குறித்து தேர்தல் அதிகாரிகள் விளக்கி கூறினார். தேர்தல் பிரசார வாகனம், தேர்தல் பிரசார மேடை, பிரசாரம் செய்யக்கூடிய இடம் குறித்து ஆன்லைன் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் ஒரு செயலி தயார் செய்துள்ளது. அதன் செய்முறை குறித்தும் அனைத்துகட்சி பிரதிநிதிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. அப்போது, தேர்தல் நேர சிக்கல்களை சுட்டிக் காட்டிய பிரதிநிதிகளுக்கு பதில் அளித்த கலெக்டர் அருண்ராஜ் நாளை (இன்று) காலைக்குள் கோரப்பட்ட சிக்கல்களுக்கு வழிவகை செய்யப்படும் என்று தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி பிரிதிநிதிகள் கலந்துகொண்டனர். இதேபோல், செங்கல்பட்டு, திருப்போரூர் மற்றும் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிகளில் 1500க்கும் மேற்பட்ட 30 வாக்குச்சாவடி மையங்களை பிரிவு வாரியாக துணை வாக்குச்சாவடி மையங்களை ஏற்படுத்துதல் மற்றும் வேட்பாளர்களின் தேர்தல் செலவினம் தொடர்பான விலைப்பட்டியல் தொடர்பாக அனைத்து கட்சி பிரமுகர்களின் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரணீத், மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, சார் ஆட்சியார் நாராயண சர்மா, உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆனந்த் குமார் சிங், மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் தியாகராஜன், தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் சிராஜ் பாபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அறிவுடைநம்பி, நேர்முக உதவியாளர் (தேர்தல்) சுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post செங்கல்பட்டில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் கூட்டம்: கலெக்டர் தலைமையில் நடந்தது appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Sriperumbudur ,Collector ,Arunraj ,Sriperumputhur ,Ambattur ,Maduravayal ,Tambaram ,Pallavaram ,Alandur Legislative Assembly ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 3 நாட்களுக்கு டாஸ்மாக் மூடல்