×

35 பேர் குண்டாசில் கைது

சோழிங்கநல்லூர்: தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த 35 பேரை, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். சென்னை பெரியமேடு பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட ஓட்டேரியை சேர்ந்த வினோத், திருமங்கலம் பகுதியில் திருட்டில் ஈடுபட்டு வந்த சத்யசாய் நகரை சேர்ந்த டிங்கு (எ) பாலாஜி, மதுரவாயல் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த ஆழ்வார்திருநகரை சேர்ந்த ரகுமான், கஞ்சா விற்பனை செய்து வந்த மண்ணடியை சேர்ந்த முகமது அப்பாஸ், ஆதம்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்த ராபின், ரூ.15 கோடி மோசடியில் ஈடுபட்ட பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த தினேஷ்குமார், மடிப்பாக்கத்தை சேர்ந்த பிரேம் கிருபால், கேளம்பாக்கத்தை சேர்ந்த திலீப்குமார், சேலையூரை சேர்ந்த அருண்குமார், சேத்துப்பட்டு பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட செம்மஞ்சேரியை சேர்ந்த நாகராஜ், மாதவரம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட பூவரசன் (எ) மோனிஷ், திருமங்கலம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட பாடிகுப்பம் சாலையை சேர்ந்த சின்னா (எ) விக்னேஷ், ராஜ், திருவல்லிக்கேணி பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்த கோவை பகுதியை சேர்ந்த கார்த்திக் தீபக், மடிப்பாக்கத்தில் கஞ்சா விற்பனை செய்து வந்த வியாசர்பாடியை சேர்ந்த சஞ்சய் (எ) அஜய், ஆதம்பாக்கம் பகுதியில் வழிப்பறி செய்த விஜய் (எ) சிவாஜி உள்ளிட்ட பல்வேறு வழக்கில் தொடர்புடைய 35 பேரை போலீசார் பரிந்துரைப்படி சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

The post 35 பேர் குண்டாசில் கைது appeared first on Dinakaran.

Tags : Kundazi ,Chozhinganallur ,Vinod ,Otteri ,Periyamedu ,Chennai ,Satyasai ,Nagar ,Tirumangalam ,Gundal ,
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...