×

கோவை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் மோடி: சற்று நேரத்தில் பாஜக ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்

கோவை: கர்நாடகாவில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி கோவை விமான நிலையம் வந்தடைந்தார். பிரதமர் மோடி சாய்பாபா காலனியில் இருந்து ஆர்.எஸ்.புரம் வரை சுமார் 2.5 கி.மீ. தொலைவிற்கு வாகன பேரணி செல்கிறார். கோவையில் பாஜக ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி வருகையை ஒட்டி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள சாய்பாபா காலனி முதல் ஆர்.எஸ்.புரம் வரை 2.5 கி.மீ. தொலைவிற்கு பிரதமர் மோடி சாலை மார்க்கமாக வாகனத்தில் சென்று பொதுமக்களை சந்திக்கும் நிகழ்ச்சி கோவையில் முதன் முறையாக நடைபெற உள்ளது. இதற்கா தனி விமானம் மூலம் பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் வந்திறங்கினார்.

விமான நிலையத்திலிருந்து வாகனம் மூலமாக கோவை அவிநாசி சாலை, நவ இந்தியா, காந்திபுரம் நூறடிசாலை, சிவானந்தா காலனி வழியாக சாய்பாபா காலனிக்கு பிரதமர் மோடி வர உள்ளார். பிரதமரின் வருகையை ஒட்டி கோவை முழுவதும் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில் பலத்த சோதனைக்கு பிறகே கட்சியினரும், பொதுமக்களும் அனுமதிக்கப்படுவார்கள். பிரதமர் மோடி சாய்பாபா காலனியில் இருந்து ஆர்.எஸ்.புரம் வரை சுமார் 2.5 கி.மீ. தொலைவிற்கு வாகன பேரணி சென்று 1998 கோவை குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார்.

The post கோவை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் மோடி: சற்று நேரத்தில் பாஜக ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Goa Airport ,BJP Road Show ,Goa ,Modi ,Karnataka ,Saibaba Colony ,R. S. ,Puram ,
× RELATED அதிக அளவில் மக்களை வாக்களிக்க வைக்க...