×

இந்தியாவிலேயே மிகப்பெரிய ஊழல் தேர்தல் நன்கொடை பத்திரம் தான்: செல்வப்பெருந்தகை விமர்சனம்

சென்னை: இந்தியாவிலேயே மிகப்பெரிய ஊழல் தேர்தல் நன்கொடை பத்திரம் தான் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். இந்தியாவில் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு அறிமுகம் செய்தது. எஸ்பிஐயில் ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கி தனி நபர்கள், நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கினர். இந்த தேர்தல் பத்திர நன்கொடைக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.

இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; இந்தியாவிலேயே மிகப்பெரிய ஊழல் தேர்தல் நன்கொடை பத்திரம் தான். எஸ்.பி.ஐ. வாய்தா வாங்கியது ஏன்? பயம் இல்லை என்றால் நேர்மையாக வெளியிட்டிருக்கலாம். போகப்போக நாட்டு மக்களுக்கு உண்மை தெரிய வரும்; பொறுத்திருந்து பாருங்கள். தேர்தல் பத்திரம் தொடர்பாக பாஜக தவறு செய்துள்ளது. வட மாநில இளைஞர்கள் கேள்விக்கு பாஜக பதில் கூறட்டும். தேர்தல் பத்திரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் பொது வெளியில் வெளியிட ஏன் அச்சம் படுகிறார்கள் என்று அவர் கூறினார்.

The post இந்தியாவிலேயே மிகப்பெரிய ஊழல் தேர்தல் நன்கொடை பத்திரம் தான்: செல்வப்பெருந்தகை விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : India ,Chennai ,Tamil Nadu Congress Party ,President ,Selvaperunthakai ,Union BJP government ,Modi ,Dinakaran ,
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...