×

பிரதமர் மோடி வரும் நிலையில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்.. கோவையில் பெரும் பரபரப்பு..!!

கோவை: கோவை ராமநாதபுரம் பகுதியில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கோவை மாநகர் காவல் கட்டுப்பாட்டு அறிக்கை தொலைபேசி மூலமாக வந்த அழைப்பில் தனியார் பள்ளி பள்ளியில் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து கோவை மாநகர் காவல்துறையினர் வெடிகுண்டு நிபுணர்களுடன் கோவை மாவட்டம் ராமநாதபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி கோவையில் இன்று மாலை பாஜக சார்பில் நடைபெறும் வாகன பேரணியில் கலந்து கொள்ள உள்ள நிலையில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோவையில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட சோதனையின் முடிவில் புரளி என்பது தெரிய வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

The post பிரதமர் மோடி வரும் நிலையில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்.. கோவையில் பெரும் பரபரப்பு..!! appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Coimbatore ,Ramanathapuram ,Modi ,
× RELATED சொல்லிட்டாங்க…