சென்னை: பொன்னேரி – மீஞ்சூர் இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக கும்மிடிப்பூண்டி மார்கத்தில் புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இன்றும், நாளையும் காலை 9.25 மணி முதல் பிற்பகல் 11.40 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் 6 ரயில்கள் பகுதி அளவு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் இருந்து புறப்படும் புறநகர் ரயில், மீஞ்சூர் வரை மட்டுமே இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து காலை 9.40 மணிக்கு புறப்படும் ரயில் எண்ணூர் வரை மட்டுமே இயக்கப்படும். மறுமார்க்கத்தில் சென்னை வரும் புறநகர் ரயில் கும்மிடிப்பூண்டிக்கு பதில் மீஞ்சூரில் காலை 9.55 மணிக்கு புறப்படும். கும்மிடிப்பூண்டிக்கு பதில் எண்ணூரில் இருந்து காலை 10.55 மணிக்கு புறநகர் ரயில் கடற்கரைக்கு புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post பராமரிப்பு பணி காரணமாக கும்மிடிப்பூண்டி மார்கத்தில் புறநகர் ரயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.