×

பொய் பிரசாரம் செய்கிறது பாஜ: கெலாட் சாடல்

ஜெய்பூர்: மக்களவை தேர்தல் தொடர்பாக ராஜஸ்தான் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான அசோக் கெலாட் வௌியிட்டுள்ள அறிக்கையில், ‘ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு, சமூக பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றியது. 3 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. இதை மக்களும் உணர்ந்து இருந்தனர்.

ஆனால் சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் அரசு மீது பாஜ பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியது. மாநிலத்தில் நடந்த குற்ற சம்பவங்கள், சட்டம், ஒழுங்கு பற்றி பாஜ பொய்யான பிரசாரம் செய்து மக்களை தவறாக வழிநடத்தி ஆட்சியை பிடித்து விட்டனர். ஆட்சி அமைத்து 3 மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் அரசு செயல்பட தொடங்கவில்லை. பேரவை தேர்தலில் காங்கிரஸ் தோற்றாலும், வாக்கு சதவீதம் குறையவில்லை. இது காங்கிரஸ் அரசு மீதான மக்கள் நம்பிக்கையை காட்டுகிறது. மக்களவை தேர்தலில் நீங்கள் எங்களை ஆசிர்வதித்து, வாக்களித்தால் பாஜ ஆட்சிக்கு நாங்கள் பாடம் சொல்லி தருவோம்’ என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

The post பொய் பிரசாரம் செய்கிறது பாஜ: கெலாட் சாடல் appeared first on Dinakaran.

Tags : BJP ,Kelat Chatal ,Jaipur ,Former Chief Minister ,Rajasthan ,Congress ,Ashok Khelat ,Lok Sabha elections ,Congress government ,Khelat Chatal ,
× RELATED பாபாசாகேப் அம்பேத்கரே வந்து...