- ஆன்டிபட்டி
- சங்கு முத்தயா
- மலப்புரம்
- உசிலம்பட்டி, மதுரை மாவட்டம்
- மாவட்ட கல்வி அலுவலர்
- தேனி மாவட்ட தனியார் பள்ளிகள்
- பிறகு நான்
- தின மலர்
ஆண்டிபட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள மல்லப்புரம் பகுதியை சேர்ந்தவர் சங்கு முத்தையா. தேனி மாவட்ட தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று காரில் மல்லப்புரத்தில் இருந்து தேனி நோக்கி வந்து கொண்டிருந்தார். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே டி.பொம்மிநாயக்கன்பட்டி விலக்கு பகுதியில் வந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், எதிரே வந்த மினி லாரி மீது நேருக்குநேர் மோதியது. இதில் சங்கு முத்தையா, டிரைவர் குமரேசன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
The post மினி லாரி – கார் மோதல் கல்வி அலுவலர், டிரைவர் சாவு appeared first on Dinakaran.