நாமக்கல்லில் காங்கிரஸ் எம்.பி., கார்த்திக் சிதம்பரம் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தேர்தல் பத்திரங்கள் வாங்கியதில், பாஜ பெரிய ஊழல் செய்துள்ளது. இதன் பின்னால் உள்ள மர்மங்களை, உச்சநீதிமன்றம் வெளியே கொண்டு வரவேண்டும். இதை விசாரிக்க தனி ஆணையம் அமைக்க வேண்டும்.
பிரதமர் அடிக்கடி தமிழகம் வந்து செல்வதால், அவரை பார்த்து எதிர்க்கட்சியினருக்கு எந்த பயமும் இல்லை. இந்து, இந்துத்துவா இல்லாத அரசாங்கம் மத்தியில் அமைய வேண்டும் என்பதில், தமிழக மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். தமிழகம், பாண்டிச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தொகுதியிலும், திமுக கூட்டணி வெற்றி பெறும். எங்கள் கூட்டணியில் யார், யார் உள்ளனர் என்பதை தெளிவாக சொல்ல முடியும். பாஜ கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் உள்ளது என்பதை அவர்களால் சொல்ல முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
The post தேர்தல் பத்திரம் ஊழல் விசாரிக்க தனி ஆணையம்: கேட்கிறார் கார்த்திக் சிதம்பரம் appeared first on Dinakaran.