×

பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சி, பொய் பிரச்சாரம் ஆகியவற்றை இந்தியா கூட்டணி முறியடிக்கும்: மும்பை பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

மும்பை: இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையை மும்பையில் ராகுல்காந்தி நிறைவு செய்தார். இதையொட்டி எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி பொதுக்கூட்டம் மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் ‘இந்தியா’ கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.குறிப்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராஷ்டிரீய ஜனதாதளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, ஜார்கண்ட் முதலமைச்சர் சம்பாய் சோரன் உள்பட பலர் பங்கேற்றுள்ளனர்.

இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
மக்களுக்காக உழைக்கவே அரசியலுக்கு வந்துள்ளோம். மக்களின் இதயத்தை புரிந்து கொள்ளவே ராகுல்காந்தி இந்தியா முழுவதும் பயணம் செய்துள்ளார். நாடு முழுவதும் ராகுல்காந்திக்கு ஆதரவு அதிகரித்துள்ளதால் பா.ஜ.க.வின் தூக்கம் கலைந்துள்ளது. இந்தியாவிற்கு இப்போது ஒற்றுமை தான் தேவைப்படுகிறது. அதை தான் ராகுல் காந்தி செய்து வருகிறார். ராகுல் காந்தியின் போராட்டம் தனி ஒரு மனிதனுக்காகவோ அல்லது காங்கிரஸ்காகவோ இல்லை, அது இந்தியாவிற்கானது.

பா.ஜ.க.வை வீழ்த்துவதிலேயே ராகுல்காந்தியின் வெற்றி அடங்கியுள்ளது. பா.ஜ.க.வால் அழிக்கப்பட்ட தேசத்தை மீட்கவே ராகுல்காந்தி நடைபயணம் மேற்கொண்டுள்ளார். இந்தியா கூட்டணி விரைவில் டெல்லியை அடையும். குமரியில் தொடங்கிய ராகுல்காந்தியின் பயணம், டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றி, கூட்டாட்சி தத்துவத்தை மதிக்கிற, அனைத்து தரப்பினருக்குமான, மதச்சார்பற்ற அரசை கட்டமைப்பதில் நிறைவடைய வேண்டும். இந்திய கூட்டணியை கண்டு பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு கடந்த 10 ஆண்டுகளில் செய்தது 2 தான். ஒன்று வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்வது, மற்றொன்று தவறான பிரச்சாரங்களை மேற்கொள்வது.

இந்தியா கூட்டணியை ஊழல் கூட்டணி என்று பிரதமர் மோடி கூறி வருகிறார்; ஆனால் யார் அதை செய்கிறார்கள் என்பது தேர்தல் பத்திர விவகாரத்தில் வெளிப்படையாக தெரிகிறது. தேர்தல் பத்திர நிதி மூலம் பா.ஜ.க. மிகப்பெரிய ஊழலை செய்துள்ளது. இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைக்கும் பா.ஜ.க.வை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும். பா.ஜ.க.வின் பொய் பிரசாரத்தை இந்தியா கூட்டணி முறியடிக்கும். பா.ஜ.க.வை அகற்றுவதே இந்தியா கூட்டணியின் இலக்கு என்று கூறினார்.

The post பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சி, பொய் பிரச்சாரம் ஆகியவற்றை இந்தியா கூட்டணி முறியடிக்கும்: மும்பை பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.

Tags : INDIA ALLIANCE ,BJP ,PRITTAL ,MUMBAI PUBLIC ASSEMBLY ,MLA K. Stalin ,MUMBAI ,RAKULGANDHI ,India ,India Coalition Party ,Tamil Nadu ,Chief Minister ,Mu. K. Stalin ,Rashtriya Dharatiya ,Dharatiya Tejaswi ,Mumbai General Assembly ,
× RELATED ரொம்ப திட்டுறாங்க ஆபீசர்….தேர்தல் ஆணையத்தில் பா.ஜ பரபரப்பு புகார்