×

மோடியால் நடிப்பதை நிறுத்தி விட்டேன்: மன்சூர்அலிகான் கலாய்

வேலூர்: நடிகர் மன்சூர் அலிகான் வேலூரில் இன்று அளித்த பேட்டி:
நான் வேலூரில் போட்டியிடுகிறேன். கூட்டணி இன்னும் முடிவாகவில்லை. அதனால் இப்போதே பணியை தொடங்கி விட்டேன்.பாஜவினர் 10 ஆண்டுகளாக நாட்டை ஆண்டு என்ன செய்தார்கள்? நாட்டையே விற்று குஜராத்தின் காலடியில் போட்டு விட்டார்கள்.

நாட்டின் பிரதமர் மோடி சரியாக ஆண்டால் ஏன் இங்கு வந்து கும்பிடு போட வேண்டும். அவரே ஹீரோ, வில்லன், பபூன் வேடம் போட்டு வருகிறார். அதனால்தான் நான் நடிப்பை நிறுத்திவிட்டு மக்களுக்கு பணியாற்ற வந்துவிட்டேன். அண்ணாமலையும் பெரிய நடிகர்தான். அவரது விஸ்வ குரு மோடியும் பெரிய நடிகர்தான். 10 ஆண்டுகளாக காற்று ஒன்றை தவிர அனைத்திலும் வரிதான்.

ஏர்போர்ட்டையும், துறைமுகத்தையும் தனியாரிடம் கொடுத்துவிட்டால் அவன் எதை எதையோ கொண்டு வருவான். தமிழக மக்கள் பாஜவுக்கு ஓட்டு போடமாட்டார்கள். ஆகவே அவர்களை போதையில் வைத்திருக்கலாம் என்று அங்கிருந்து போதையை சப்ளை செய்வது எல்லாம் பாஜதான். இவ்வாறு அவர் கூறினார்.

The post மோடியால் நடிப்பதை நிறுத்தி விட்டேன்: மன்சூர்அலிகான் கலாய் appeared first on Dinakaran.

Tags : Modi ,Mansoor Ali Khan Kalai ,Vellore ,Mansoor Ali Khan ,BJP ,Gujarat ,
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...