×

தொழுகையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்!

அகமதாபாத்: குஜராத் பல்கலைக்கழக விடுதிக்குள் தொழுகையில் இருந்த ஆப்கானிஸ்தான், உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் 5 பேர் மீது மர்ம கும்பல் கொடூர தாக்குதல். மேலும் மாணவர்களில் லேப்டாப், வாகனங்கள் உள்ளிட்டவற்றைச் சேதப்படுத்தியுள்ளனர். தடி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் விடுதிக்குள் நுழைந்த மர்ம கும்பல், விடுதியின் பாதுகாவலரையும் தாக்கிவிட்டு சென்றனர். இச்சம்பவம் குறித்து மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி, உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

 

The post தொழுகையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்! appeared first on Dinakaran.

Tags : Ahmedabad ,Afghanistan ,Uzbekistan ,Gujarat University ,
× RELATED குஜராத்தில் கார் மீது லாரி மோதி 10 பேர் பலி