×

பயணிகள் வசதிக்காக இன்று கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கம்: மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இயக்கப்படும் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பயணிகள் வசதிக்காக இன்று கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை, 7 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும். இரவு 8 மணி முதல் 10 மணி வரை, 10 நிமிட இடைவெளியிலும், இரவு 10 முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் ரயில்கள் இயக்கப்படும்.

The post பயணிகள் வசதிக்காக இன்று கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கம்: மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Metro Administration ,Chennai ,Chennai Beach ,Tambaram ,Dinakaran ,
× RELATED ஆவடி வரை மெட்ரோ ரயில் திட்டத்தை...