×

மூதாட்டியிடம் கார் வாங்குவதாக மோசடி செய்தவர் கைது

 

நெல்லை,மார்ச் 17: செங்கோட்டை பஜனை மடத்து தெரு பகுதியில் வசித்து வருபவர் பிச்சம்மாள்சாமி (87). இவரின் 4 மகன்கள் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். இதனால் வயதான பிச்சம்மாள் சாமியை அவர்களின் தூரத்து உறவினரான செங்கோட்டை இலஞ்சி ரோட்டை சேர்ந்த காளிதாஸ் என்பவர் கடந்த பத்து வருடங்களாக கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் காளிதாஸ், பிச்சம்மாள்சாமியிடம் புதிதாக கார் வாங்கி தருவதாக பேசி கடந்த 2016ம் ஆண்டு 12 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் பெற்று கார் வாங்கி உள்ளார். பின்னர் பிச்சம்மாள்சாமி பெயருக்கு காரை பதிவு செய்யாமல் காளிதாஸ் தனது பெயரிலே பதிவு செய்துள்ளார். இந்த மோசடி குறித்து பிச்சம்மாள் சாமி தற்போது செங்கோட்டை காவல் ஆய்வாளர் ராஜேஷ் கண்ணனிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி காளிதாஸ் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

The post மூதாட்டியிடம் கார் வாங்குவதாக மோசடி செய்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Nella ,Pichhammalsami ,Senkottai Bajana Matatu Street ,United States ,Pichhammal Sami ,Kalidas ,Sengkot Llanchi Road ,
× RELATED வள்ளியூரிலிருந்து திசையன்விளைக்கு...