×

நெல்லை அருகே மூதாட்டி தற்கொலை

 

நெல்லை, மார்ச் 17: சிவகிரி அருகே விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.சிவகிரி அருகேயுள்ள தேவிபட்டணம் ஆசாரி மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் ராமர். இவரது மனைவி பெத்தம்மாள் (85). இவர் நேற்று வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிவகிரி காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து சென்று மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் பெத்தம்மாளின் மகன் தங்கராஜ் (50) தனது தம்பி முனியாண்டியிடம் நீதான் அம்மா இறப்பிற்கு காரணம் என கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் தங்கராஜ், முனியாண்டியை கம்பால் அடித்துள்ளார். படுகாயமடைந்த முனியாண்டி தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post நெல்லை அருகே மூதாட்டி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Nellai ,Sivagiri ,Rama ,Devipattanam Asari ,Mettutheru ,Bethammal ,
× RELATED நெல்லையில் கட்டுக்கடங்காத கூட்டம்;...