- ராகவேந்திர சுவாமி
- தஞ்சாவூர் வடவடங்கரை
- தஞ்சாவூர்
- ராகவேந்திர சுவாமி
- பிருந்தாவன்
- வடவதங்கரை
- விஷ்ணு
- பிரகலாதன்
- வேங்கடநாதன்
- சுதீந்திரன்
தஞ்சாவூர், மார்ச் 17: தஞ்சாவூர் வடவாற்றங்கரையில் ராகவேந்திர சுவாமிகளின் பிருந்தாவனம் அமைந்துள்ளது. விஷ்ணு பக்தரான பிரகலாதனின் மறு அவதாரமாக ராகவேந்திர சுவாமிகள் திகழ்கிறார். தஞ்சாவூரில் 1621ம் ஆண்டு வேங்கடநாதன் என்று அழைக்கப்பட்ட ராகவேந்திர சுவாமிகள் துறவறம் ஏற்று சுதீந்திர மடத்தின் பீடாதிபதியாக ராகவேந்திர தீர்த்தராக பொறுப்பேற்றார். இந்த பிருந்தாவனத்தில் ராகவேந்திர சுவாமிகளுக்கு ஜெயந்தி விழா வெகுவிமரிசையாக நடக்கிறது.இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த பிருந்தாவனத்தில் நேற்று காலை ராகவேந்திர சுவாமிகளின் 429வது ஆண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டு காலை 8 மணிக்கு 108 கலச பூஜையும் அதனைத்தொடர்ந்து காலை10 மணிக்கு ராகவேந்திர சுவாமிகளின் பிருந்தாவனத்திற்கு 108 கலச அபிஷேகம் மற்றும் விஷேட பஞ்சாமிர்தம் அபிஷேகம் நடந்தது.பகல் 11.30 மணிக்கு பட்டாபிஷேகம் மகோற்சவம் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.பகல் 12 மணிக்கு சிறப்பு அலங்காரம் , தீபாராதனை மற்றும் அன்னதானம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குருராயரை தரிசனம் செய்தனர். ஜெயந்தி விழாவிற்கான ஏற்பாடுகளை ராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவனம் டிரஸ்டிஸ் விஜேந்திரன், கபிலன் செய்து இருந்தனர்.
The post தஞ்சாவூர் வடவாற்றங்கரையில் ராகவேந்திர சுவாமிகளின் 429ம் ஆண்டு ஜெயந்தி appeared first on Dinakaran.